For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேலும் ஒரு சாலைப் பணியாளர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே சாலைப் பணியாளர் ஒருவர் வறுமையின் கொடுமையால் மரணமடைந்தார். இதன் மூலம்வேலை பறிபோனதையடுத்து பலியான சாலைப் பணியாளர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் சாலைப் பராமரிப்புப் பணிகளுக்காக 10,000 சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதிமுகஆட்சிக்கு வந்ததும், சாலைப் பணியாளர்கள் 10,000 பேரும் ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

மீண்டும் வேலை தரக் கோரி சாலைப் பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னைஉயர்நீதிமன்றத்தில் அவர்கள் தொடர்ந்த வழக்கில் சாலைப் பணியாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

இருப்பினும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளதால், இன்னும் வேலைதருவது தொடர்பாக அரசு எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளது.

இந் நிலையில் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களாலும் இதுவரை 70 சாலைப் பணியாளர்கள்பலியாகியுள்ளனர். தற்போது மேலும் ஒரு சாலைப் பணியாளர் இறந்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவரான பாபு வேலை பறிபோனதால் குடும்பம் நடத்த முடியாமல்வறுமையால் இறந்தாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். அவருக்கு வயது 45.

சாலைப் பணியாளர்கள் தொடர்ந்து இறந்து வருவதால் தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்த சாலைப் பணியாளர்கள் சங்கம்முடிவெடுத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X