விஜயகாந்த் பேனர்கள்: போலீசார் அகற்றம்!
சென்னை :
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்தின் பேனர் உள்பட அரசியல்கட்சிகளின் டிஜிட்டல் பேனர்களை போலீஸார் அகற்றினர்.
சென்னையில் டிஜிட்டல் பேனர்களின் பெருக்கம் அதிகரித்து விட்டது. கட்சிகளின் வட்டச் செயலாளரின் மகள்காதுகுத்துக்கு ஆரம்பித்து எதற்கெடுத்தாலும் சிறிய, பிரமாண்ட (பொருளாதார வசதிக்கு ஏற்ப) சைசில் டிஜிட்டல்பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.அரசியல் கட்சிகளின் பேனர்களை விட, நடிகர் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினரின் பேனர்கள் தான் அதிகஅளவில் பேனர்கள், கட் அவுட்களை வைத்து வருகின்றனர்.
இந்த பேனர்களை இத்தனை நாட்களாக கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட போலீசார், விஜய்காந்த் கட்சிஆரம்பிக்கப் போகும் நிலையில், திடீரென அவற்றை அகற்றியுள்ளனர்.
மதுரையில் நடக்கப் போகும் ரசிகர் மன்ற மாநில மாநாடு, கட்சி தொடக்க விழாவையொட்டி நகர் முழுவதும்பல்வேறு இடங்களில் பேனர்களைக் கட்டி கலக்கி வருகின்றனர் விஜயகாந்த் ரசிகர்கள்.
திருவான்மியூர் சிக்னல் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை நெடுகிலும் பல்வேறு இடங்களில் விஜயகாந்த்மன்றத்தினர் பேனர்கள் வைத்திருந்தனர்.
இந் நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு உள்ளதாகக் கூறி அவற்றை போலீசார் அகற்ற முடிவு செய்தனர்.இதையடுத்து அரசியல் கட்சியினர் பலர் தங்களது பேனர்களை அகற்றி பத்திரமாக எடுத்துச் சென்றுவிட்டனர்.(போலீசார் அகற்றினால் நேராக மாநகராட்சி லாரிக்குப் போய்விடும் என்பதால்)
ஆனால் விஜயகாந்த் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரின் பேனர்கள் மட்டும்அகற்றப்படாமல் இருந்தன. அவற்றை போலீஸார் இன்று அகற்றி அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications