For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூறாவளி சுற்றுப் பயணம் தொடங்கும் வைகோ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதிமுகவினரை உற்சாகப்படுத்தும் வகையிலும், தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையிலும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் மதிமுகவும்,சோம்பல்முறித்துக் கொண்டு களத்தில் குதித்துள்ளது.

செப்டம்பர் 6ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள், தேர்தல் நிதியளிப்புக்கூட்டங்களுக்கு அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது. அனைத்துக் கூட்டங்களிலும் வைகோ கலந்து கொள்கிறார்.

மதிமுக, கடந்த சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அனைத்துத் தொகுதிகளிலும் தோல்விஅடைந்தது. முகால்வாசித் தொகுதிகளில் மதிமுக வேட்பாளர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை.

ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 4 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும்வென்றார் வைகோ.

இந் நிலையில் வரும் சட்டசபைத் தேர்தல் மூலம் மதிமுக பிரதிநிதிகளை சட்டசபைக்குள் அனுப்பியே ஆகவேண்டும் என்று வைகோ சூளுரைத்துள்ளார். இதை நோக்கமாகக் கொண்டு கட்சியினர் தீவிரமாக பாடுபடவேண்டும் என்றும் அவர் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை மையமாகக் கொண்டே தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தி அதில் பங்கேற்க வைகோதீர்மானித்துள்ளார்.

செப்டம்பர் 6ம் தேதி காஞ்சிபுரத்தில் தனது பிரசார பொதுக் கூட்டத்தைத் தொடங்கும் வைகோ, 7ம் தேதிபெரம்பலூர், 8ம் தேதி கோவை, 11ம் தேதி தூத்துக்குடி, விருதுநகர், 13ம் தேதி ஈரோடு, கரூரில் பேசுகிறார்.

செப்டம்பர் 15ம் தேதி சென்னை வரும் அவர் வட சென்னையில் நடைபெறும் பெரியார், அண்ணா பிறந்த நாள்விழா மற்றும் தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.

செப்டம்பர் 17ல் திருவள்ளூர், 19ம் தேதி மதுரை, 27ம் தேதி திருநெல்வேலி, 28ம் தேதி திருச்சி, 29ம் தேதிபுதுக்கோட்டை, தஞ்சை, 30ம் தேதி திருவாரூர், நாகை ஆகிய ஊர்களில் பேசுகிறார்.

அக்டோபர் 1ம் தேதி தென் சென்னை, 2ம் தேதி கடலூர், விழுப்புரம், 3ம் தேதி திருவண்ணாமலை, 4ம் தேதிவேலூர், தர்மபுரி, 5ம் தேதி சேலம், நாமக்கல், 6ம் தேதி திண்டுக்கல், தேனி ஆகிய ஊர்களில் பேசுகிறார்.

அக்டோபர் 7ம் தேதி கன்னியாகுமரி, 10ம் தேதி நீலகிரி, 11ம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில்கலந்து கொண்டு பேசுகிறார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X