ஆசிரியை மீனாட்சி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில், உண்மை அறியும் சோதனை முடிவுகள் வெளிவருவதில் தாமதம்நிலவுவதாக சிபிசிஐடி போலீஸார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணைசெப்டம்பர் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி காணாமப் போன வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீஸார் இந்தவழக்கு தொடர்பான தங்களது அறிக்கையை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றக கிளை கெடுநிர்ணயித்திருந்தது.இந் நிலையில் இன்று சிபிசிஐடி போலீஸார் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கம், குளித்தலை அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம் உள்ளிட்டோரிடம்பெங்களூரில் லை-டிடெக்டர் மூலம் உண்மை அறியும் சோதனை நடத்தப்பட்டது.
இச் சோதனையின் முடிவுகள் வருவதில் தாமதம் நிலவுகிறது. எனவே விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றுகோரப்பட்டிருந்தது.
இதை ஏற்ற நீதிபதிகள், வரும் செப்டம்பர் 30ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications