For Quick Alerts
For Daily Alerts
Just In
ஒரு 10 சீட் இருந்தா குடுங்கப்பா...மூ.மு.க!
மதுரை:
சட்டசபைத் தேர்தலில் 10 தொகுதிகளை ஒதுக்குமாறு அதிமுகவை கேட்டுக் கொள்வோம் என்று மூவேந்தர்முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கூறியுள்ளார்.
முல்லைப் பெரியார் அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்தக் கோரி மதுரை மாவட்டம் கீழவளவுகிராமத்திலிருந்து கம்பம் வரை ஸ்ரீதர் வாண்டையார் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த பத்து ஆண்டுகளாகவே நாங்கள் அதிமுகவுடன்கூட்டணி வைத்துள்ளோம் (அப்படியா?). இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுகவுக்காக அனைத்துத்தொகுதிகளிலும் தீவிரப் பிரசாரம் செய்துள்ளோம்.
தமிழகம் முழுவதும் 72 சட்டசபைத் தொகுதிகள், 12 எம்.பி தொகுதிகளில் எங்களுக்கு ஓட்டு வங்கி உள்ளது.இவை அனைத்துமே அதிமுகவுக்கே சென்று வருகின்றன. எனவே வருகிற சட்டசபைத் தேர்தலில் 10தொகுதிகளை அதிமுகவிடம் கேட்போம்.
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக 1,000 பேருடன் டெல்லி சென்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளமகாத்மா காந்தி சிலை முன் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம் என்று மிரட்டினார் வாண்டையார்.
Comments
Story first published: Wednesday, August 24, 2005, 5:30 [IST]