ஓ.பி. மகனுக்கு ஜெ. தலைமையில் திருமணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர்5ம் தேதி சென்னையில் நடத்தி வைக்கிறார்.
பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்தரநாத்குமார் எம்.பி.ஏ. பட்டதாரியாவார். அவருக்கும் திண்டுக்கல் மாவட்டஎஸ்.பி. கந்தசாமியின் மகளான ஆனந்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.இவர்களது திருமணம் சென்னையில் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது.
கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தத் திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா தலைமைதாங்கி நடத்தி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications