பெரு: சூறாவளியில் சிக்கி விழுந்த விமானம்- 41 பேர் பலி, 51 பேர் உயிர் தப்பினர்

Subscribe to Oneindia Tamil

லிமா:

தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் அமேசான் காட்டுப் பகுதியில் போயிங் விமானம் விழுந்து நொறுங்கியதில் 41 பேர்பலியாகிவிட்டனர். 56 பேர் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

பெரு நாட்டின் டான்ஸ் ஏர்லைன்சுக்குச் சொந்தமான அந்த போயிங் 737-200 ரக விமானம் பெரு தலைநகர் லிமாவில் இருந்துவந்து கொண்டிருந்தது. அமேசான் காட்டுப் பகுதியில் உள்ள நகரமான புகால்பா என்ற இடத்தில் தரையிறங்க இருந்தது.

ஆனால், விமான நிலையத்தை நெருங்கியபோது அந்த விமானம் திடீரென வீசிய மிக பயங்கரமான சூறாவளியில் சிக்கிக்கொண்டது.

இதில் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. ஆனாலும் விமானத்தை எப்படியாவது அப் பகுதியில் மரங்கள் இல்லாதகரடுமுரடான புல் வெளியில் தரையிறக்க விமானி முயன்றார். அவ்வாறு தரையிறங்கியபோது அந்த விமானம் தரையில் மோதிஇரண்டாகப் பிளந்தது.

இதில் 41 பயணிகள் பலியாகிவிட்டனர். விமான சிப்பந்திகள் 7 பேர் உள்பட 51 பலத்த காயங்கள், எலும்பு முறிவுகளுடன் உயிர்தப்பிவிட்டனர். சிலர் சிறிய காயம் கூட இல்லாமல் தப்பியுள்ளனர்.

கடந்த 12 ஆண்டுகளில் விபத்துக்குள்ளாகியுள்ள 6வது டேன்ஸ் நிறுவனம் விமானம் இது. கடந்த ஒரு மாதத்தில் உலகம்முழுவதும் நடந்துள்ள 7வது பெரிய விமான விபத்து இது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+