தமிழகத்தில் வறுமைக் கோட்டில் வாழ்வோர் 1.3 கோடி பேர்
டெல்லி:
தமிழகத்தில் 1.3 கோடி பேர் வறுமைக் கோட்டில் கீழ் மிகவும் நொடிந்து போய் வாழ்ந்து வருவதாக நாடாளுமன்றத்தில்தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் 26 கோடி பேர் வறுமையில் கோரப் பிடியில் சிக்கி வாழ்ந்து வருகின்றனர் என மத்திய திட்டத்துறைஇணையமைச்சர் ராஜசேகரன் கூறினார்.நாட்டில் வறுமைக் கோட்டில் கீழ் வாழ்வோரில் 19 கோடி பேர் கிராமப் பகுதிகளில் வசிக்கின்றனர். உத்தரப் பிரதேசத்தில் தான்நிலைமை மிக மோசம். அங்கு 5.3 கோடி பேர் வறுமைக் கோட்டில் கீழ் வசிக்கின்றனர்.
அடுத்த இடத்தில் பிகார் உள்ளது. இங்கு 4.3 கோடி பேரும், மத்தியப் பிரதேசத்தில் 3 கோடி பேரும் மேற்கு வங்கத்தில் 2.1 கோடிபேரும், ஒரிஸ்ஸாவில் 1.7 கோடி பேரும் வறுமையின் பிடியில் உள்ளனர்.
தமிழகத்தில் 1.3 கோடி பேரும் ஆந்திராவில் 1.2 கோடி பேரும், கர்நாடகத்தில் 1 கோடி பேரும் வறுமைக் கோட்டில் கீழ்வசிக்கின்றனர்.
இந்த நிலைமையில் தான் கடந்த பொதுத் தேர்தலின்போது இந்தியா ஒளிர்கிறது என்று ஒரு கோஷம் மக்களின் காதில் தேனாகபாயந்தது என்பது நினைவுகூறத்தக்கது.