For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை கருவிகள்: களமிறங்கும் அமெரிக்கா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்தியப் பெருங்கடலில் சுனாமி அலைகள் உருவானால் அதை முன் கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் திட்டத்தைஅமெரிக்கா நிறைவேற்றவுள்லது.

யுஎஸ் எய்ட் அமைப்பு 16.6 மில்லியன் டாலர் செலவில் இதற்கான தொழில்நுட்பம் மற்றும் சென்சார் கருவிகளை உருவாக்கிஇந்தியப் பெருங்கடல் பகுதியில் பொருத்தவுள்ளது. கடலில் ஏற்படும் மாற்றங்களை இந்த சென்சார்கள் கண்டறிந்து செயற்கைக்கோள்கள் மூலம் தரைக் கட்டுப்பாட்டு மையங்களை எச்சரிக்கும்.

இதன்மூலம் சுனாமி அலைகள் உருவாகியிருப்பது குறித்து முன் கூட்டியே எச்சரிக்கைகளை வெளியிட முடியும். இந்தியாமட்டுமல்லாமல், இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து, மாலத்தீவுகள் உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் நாடுகள்அனைத்தும் இத் திட்டத்தால் பலனடையும்.

அமெரிக்காவின் கடல் ஆராய்ச்சி மையம், புவியியல் ஆராய்ச்சி மையம், வர்த்தக வளர்ச்சி மையம், வனத்துறை ஆகியவையும்யுனேஸ்கோ அமைப்பும் இணைந்து இத் திட்டத்தை நிறைவேற்றவுள்ளன.

இத் திட்டம் நிறைவேறும் வரை இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்கள், சுனாமிகள் குறித்து ஹவாயில் உள்ளஅமெரிக்காவின் பசிபிக் சுனாமி எச்சரிக்கை அமைப்பு கண்காணிக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X