இன்னொரு வீரப்பன் வந்தாலும் வீழ்த்துவோம்: விஜயக்குமார்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் மாதிரி இன்னொரு வீரப்பன் உருவாகி வந்தாலும், அவனையும் வீழ்ததுவோம் என்றுதமிழக சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபி விஜயக்குமார் கூறினார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட விஜயக்குமார் பேசுகையில், வீரப்பன் வேட்டைக்குமுதல்வர் ஜெயலலிதா மிகவும் உதவியாக இருந்தார். நாங்கள் கேட்ட உதவிகளை எல்லாம் அவர் உடனடியாகசெய்து கொடுத்தார். இதன் காரணமாகவே வீரப்பனை வீழ்த்த முடிந்தது.எந்தவிதக் குழப்பம் இல்லாமல், வீரப்பனை வீழ்த்த வேண்டும் என்பது மட்டுமே எங்களது ஒரே எண்ணமாகஇருந்ததால, வீரப்பனை எளிதில் வீழ்த்த முடிந்தது.
வீரப்பன் விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள், கருத்துக்கள் நிலவுகின்றன. அது குறித்து நாங்கள்கவலைப்படவில்லை. வீரப்பன் வீழ்த்தப்பட வேண்டியவன் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
இறந்தது வீரப்பன்தானா என்று யாரும் சந்தேகப்பட வேண்டாம். நிச்சயம் அது வீரப்பன் தான். அவன் நிரந்தரமாகதூங்கி விட்டான், நாங்களும் நிம்மதியாக இருக்கிறோம்.
இந் நிலையில் இன்னொரு வீரப்பன் உருவாகி வந்தாலும், அவனையும் வீழ்த்த நாங்கள் தயாராகவேஇருக்கிறோம் என்றார் விஜயக்குமார்.












Click it and Unblock the Notifications