போப்புக்கு அல்-கொய்தா மிரட்டல்: சிட்னி, சிங்கப்பூர், டோக்கியோவை தாக்க வாய்ப்பு
லண்டன்:
கத்தோலிக்கர்களின் புனிதத் தந்தையான போப்பாண்டவர் ஜோசப் பெனடிக்டுக்கு அல்-கொய்தா கொலை மிரட்டல்விடுத்துள்ளது.
வாடிகன் நிர்வாகத்துக்கு பேக்ஸ் மூலம் இந்த மிரட்டல் வந்துள்ளது. அரபி மொழியில் 3 பக்கம் கொண்ட இந்த மிரட்டல் கடிதம்பார்சிலோனாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.அமெரிக்காவுக்கு ஆதரவாக இத்தாலியும் வாடிகனும் செயல்பட்டு வருகின்றன. எனவே விரைவில் உங்களைத் தாக்குவோம்என அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே டோக்கியோ, சிங்கப்பூர், சிட்னி ஆகிய நகர்களைத் தாக்க அல்-கொய்தா திட்டமிட்டு வருவதாக பிரான்ஸ்எச்சரித்துள்ளது.
இதுவரை அமெரிக்கா, ஐரோப்பாவைத் தாக்கி வரும் அல்-கொய்தா, ஆசிய நகர்களையும் தாக்க திட்டமிட்டு வருவதாகத்தெரிகிறது.
இது குறித்து பிரான்ஸ் நாட்டின் தீவிரவாத எதிர்ப்பு நிபுணரும் நீதிபதியுமான ஜீன் லூயிஸ் கூறுகையில்,
டோக்கியோ, சிங்கப்பூர், சிட்னி போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகர்கள் அல்-கொய்தாவின் தாக்குதல்பட்டியலில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நகர்களைத் தாக்குவதன் மூலம், முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தைஏற்படுத்தி, உலக அளவில் பொருளாதாரத்தை சீர்குலைக்க முடியும் என அல்-கொய்தா கருதுகிறது.
குறிப்பாக ஜப்பானைத் தாக்கினால் தெற்காசியா முழுவதும் அதிர்ச்சியைப் பரப்ப முடியும் என அல்-கொய்தா கருதுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications