ஆசிரியர்கள் இல்லாத பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போதுமான ஆசிரியர்கள் இல்லாத சுயநதி பொறியியல் கல்லூரிகளுக்கு, குறைபாடுகளைச் சரி செய்து கொள்ளஒரு மாத கால அவகாசம் கொடுத்து அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறுகையில், தமிழகத்தில் உள்ள சுயநிதிபொறியியல் கல்லூரிகள் பலவற்றில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.இதையடுத்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களுக்கு பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.1 மாதத்திற்குள் தங்களது குறைபாடுகளை சரி செய்து கொள்ளுமாறு இந்தக் கல்லூரிகள்அறிவுறுத்தப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் இந்தக் கல்லூரிகளில் பல்கலைக்கழக குழு ஆய்வுமேற்கொள்ளவுள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் குறைபாடுகளை சரி செய்து கொள்ளாத கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்படுவர் என்றார் விஸ்வநாதன்.












Click it and Unblock the Notifications