கார்த்திக்குக்கு தேவர் பேரவை கண்டனம்
சென்னை:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அமைந்துள்ள மதுரை கோரிப்பாளையம் பகுதியிலும், தமுக்கம்மைதானத்திலும் கார்த்திக்கின் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கு தமிழக தேவர் பேரவை கண்டனம்தெரிவித்துள்ளது.
நடிகர் கார்த்திக்கின் சரணாலயம் அமைப்பின் கூட்டம் மதுரை தமுக்கம் மைதானத்தில் சமீபத்தில் நடந்தது.இந்தக் கூட்டத்தின்போது தனது அரசியல் பிரவேசம் குறித்து கார்த்திக் அறிவிக்கவிரிந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் எதிர்பாராதவிதமாக ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் கூட்டம் பாதியிலேயே முடிந்தது. மேலும்போலீஸார் மீது கல்வீச்சும் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு தேவர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் நடந்த பேரவையின்நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து பேரவையின் தலைவர் சீனிச்சாமித் தேவர் கூறுகையில், மதுரையில் நடிகர் கார்த்திக் கலந்து கொண்டநிகழ்ச்சிகள் நடந்த தமுக்கம் மைதானம், தேவர் சிலை உள்ள பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள்நடந்துள்ளன.
இக்குலத்து இளைஞர்களின் எதிர்கால நலனுக்கு பாடுபடும் தமிழ்நாடு தேவர் பேரவைக்கு ஆதரவாக கார்த்திக்இருக்க வேண்டும். அதை விடுத்து சமுதாய இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லக் கூடாது.
நடிகர்கள் பக்கம் ஈர்க்கப்பட்டு அந்த இளைஞர்கள் விளக்கு தீயில் வீழுகிற விட்டில் பூச்சிகளாக மாறி விடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
சென்னை எழும்பூரில், தேவர் பேரவைக்குச் சொந்தமான இடத்தில் பிரமாண்டமான தேவர் மாளிகை கட்டிடத்தைஎழுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. தேவர் பிறந்த அக்டோபர் 30ம் தேதி அடிக்கல் நாட்டப்படும் என்றார்.