For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருமான வரி வழக்குகள்: மனைவி விவகாரம்- பிரதமர், சோனியாவுக்கு ப.சி. விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தனது மனைவி நளினி சிதம்பரம், வருமான வரித்துறை தொடர்பான வழக்குகளில் ஆஜராவது தொடர்பாக பிரதமர்மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துகடிதம் எழுதியுள்ளார்.

சமீபத்தில் மாநிலங்களவையில் அதிமுக தலைவர் பி.ஜி.நாராயணன் பேசுகையில், நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினிசிதம்பரம், சென்னை வருமான வரித்துறை தொடர்பான சில வழக்குகளில் மத்திய அரசின் வழக்கறிஞறாக ஆஜராகிவருவதாகவும், இது அதிகார துஷ்பிரயோகம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாருக்கு ப.சிதம்பரம் உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்தார். அவரது மனைவி நளினியும் இதை மறுத்தார். மத்தியநிதித்துறை தொடர்பான வழக்குகளில் தான் ஆஜராவது தனது கணவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.

இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருக்கு ப.சிதம்பரம் ஒரு விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், எனது மனைவி நளினி சிதம்பரத்தை சில வழக்குகளில் ஆஜராகும்படி, மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் தான்நியமித்துள்ளது. இது எனக்குத் தெரியாமலேயே நடந்துள்ளது. இதுதொடர்பாக எந்தவித கோப்பும் எனக்கு வரவில்லை.

சென்னை, வருமான வரித்துறை தலைமை ஆணையரின் பரிந்துரையின்பேரிலேயே சில வழக்குகள் எனது மனைவியிடம்கொடுக்கப்பட்டுள்ளன. நான் டெல்லியில் இருப்பதால் இந்த விவகாரங்கள் எதுவும் எனக்குத் தெரியவில்லை என்றுகூறியுள்ளார் சிதம்பரம்.

ப.சிதம்பரத்தின் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை காங்கிரஸ் கட்சியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத்தெரிகிறது. ஆனால் அதிமுக இதை விடுவதாக இல்லை என்று தோன்றுகிறது.

நாடாளுமன்ற மாநிலங்களவை அதிமுக தலைவர் பி.ஜி.நாராயணன் கூறுகையில், தனது பதவியை ப.சிதம்பரம் தவறாகபயன்படுத்தியுள்ளார். எனவே அவரை பதவியிலிருந்து நீக்கும் வரை அதிமுக ஓயாது. இந்தப் பிரச்சினையில் மாநிலங்களவைத்தலைவர் பைரான்சிங் ஷெகாவத் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றார்.

சர்ச்சையில் சிக்கியுள்ள நளினி சிதம்பரம், வருமான வரித்துறை தொடர்பான வழக்குகளில் இன்று நேற்று ஆஜராகவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1977ம் ஆண்டு முதலே தொடர்ந்து ஆஜராகி வருகிறார். வருமான வரித்துறை தொடர்பான வழக்குகளில் அவருக்கு மிகப்பெரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X