போலீஸ் என்கெளண்டரில் ரவுடி சுட்டு கொலை
சென்னை :
சென்னை அருகே போலீஸாருடன் நடந்த என்கெளண்டரில் பிரபல ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டான்.
அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணி என்ற மணிகண்டன் அப் பகுதியில் பிரபல ரவுடியாக விளங்கினான்.அவன் மீது 4 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந் நிலையில் நேற்று இரவு அப் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளான்மணிகண்டன். கண்ணன் பணம் தர மறுத்ததால், அவரை மணிகண்டன் கத்தியால் குத்தி விட்டுத் தப்பினார்.
இதுகுறித்து கண்ணன் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் மணிகண்டனைப் பிடிக்கச்சென்றனர். பட்டாபிராம் அருகே அவன் மறைந்திருப்பதை அறிந்து அங்கு போலீசார் சென்றனர்.
அவன் தங்கியிருந்த வீட்டை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸார் மீது நாட்டுவெடிகுண்டுகளை வீசிவிட்டுத் தப்ப முயன்றான் மணி.
இதையடுத்து போலீஸார் மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் அரசுபொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
ஆனால வழியிலேயே அவன் மரணமடைந்தார். மணிகண்டன் வீசிய நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருசப்-இன்ஸ்பெக்டரும் காவலரும் படுகாயமடைந்துள்ளார்.
ரவுடிகள் ஒழிக்கப்படுவர்: கமிஷனர்
காயமடைந்த இருவரும் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சென்னை மாநகர போலீஸ் கமிஷினர் நடராஜ் இன்றுசந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரவுடிகள் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டால் இப்படித்தான் முடிவு அமையும். இது குற்றவாளிகளுக்குஒரு படிப்பினை. ரவுடிகள், குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
சென்னை நகரில் ரவுடிகள் அட்டகாசம் அறவே ஒழிக்கப்படும். ரவுடிகள் அடியோடு வேரறுக்கப்படுவார்கள் என்றார் நடராஜ்.












Click it and Unblock the Notifications