For Quick Alerts
For Daily Alerts
Just In
டி.ஆர்.பாலுவின் வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம்
சென்னை:
மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு,தென் சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றதைஎதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தென் சென்னை தொகுதியில் டி.ஆர்.பாலுவை எதிர்த்துப்போட்டியிட்டு தோல்வியுற்ற புருஷோத்தமன் என்பவர்உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதில், டி.ஆர்.பாலு தனது வேட்பு மனுவில் தனது இரண்டாவது திருமணம் குறித்த விவரத்தை தெரிவிக்காமல்விட்டு விட்டார். எனவே அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்வென்றாது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலசுப்ரமணியம், மனுதாரர் கூறிய காரணங்களை ஏற்க முடியாது என்று கூறிமனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Comments
Story first published: Tuesday, August 30, 2005, 5:30 [IST]