For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கற்பழிப்பு: மன்சூர் மீதான ஜீவனாம்ச வழக்கு தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜீவனாம்சம் கோரி ஸ்னேகா என்ற பெண் நடிகர் மன்சூர் அலிகான் மீது தொடர்ந்த வழக்கை சென்னைசெஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

சென்னையைச் சேர்ந்த ஸ்னேகா என்ற பெண் மன்சூர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.அதில், தான் மன்சூரிடம் உதவியாளராக இருந்ததாகவும், அப்போது அவர் தன்னைக் கற்பழித்து விட்டதாகவும்,மன்சூர் அலிகான் மூலம் தனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும், இதனால் தனக்கு அவர் ஜீவனாம்சம் தரவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார், மன்சூர் அலிகானுக்கு7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 3 லட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். இந்த உத்தரவை எதிர்த்து மன்சூர்உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந் நிலையில் ஸ்னேகா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கும், குழந்தை மகபூப்அலிகானுக்கும் மாதம் ரூ. 5,000 ஜீவனாம்சம் வழங்க மன்சூருக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த மனு மீது இதுவரை 4 முறை விசாரணை நடந்துள்ளது. ஆனால், நான்கு முறையும் ஸ்னேகா விசாரணைக்குவரவில்லை. 5வது முறையாக நேற்றும் மனு விசாரணைக்கு வந்தது. அப்போதும் ஸ்னேகா வராத காரணத்தால்வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X