பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்கிறது
டெல்லி:
விரைவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்த மத்திய அரசுக்கு இடதுசாரிக் கட்சிகள் தடை போட்டு வருகின்றன.ஆனால், நிலைமை கட்டு மீறிப் போய்க் கொண்டிருப்பதால் பல்லாயிரம் கோடி லாபம் ஈட்டி வந்த அரசின் எண்ணெய்நிறுவனங்கள் கடந்த சில மாதங்களிலேயே நஷ்டத்துக்கு உள்ளாக ஆரம்பித்துவிட்டன. இதே நிலை நீடித்தால் எண்ணெய்நிறுவனங்களை நடத்துவது சிரமமாகிவிடும் என்பதால் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.63 பைசா அதிகமாக இருக்க வேண்டும். இதே போல டீசலும்உண்மையான விலையை விட ரூ. 4.15 குறைத்தே விற்கப்படுகிறது.
இதை ஓரளவுக்கு சமாளிக்கும் வகையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2.50 உயர்த்தவும், டீசல் விலையையும் ரூ. 2வரை உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதே போல சமையல் எரிவாயுவைப் பொருத்தவரைசர்வதேச விலையை விட ரூ. 10 குறைத்தே விற்கப்படுகிறது. இதையும் சரி செய்ய கேஸ் விலையையும் சிறிது உயர்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதே போல மண்ணெண்ணெய் விலையும் 20 பைசா வரை உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications