வீட்டில் பதுக்கப்பட்ட 58 கிலோ வெடிபொருட்கள்: பெண் கைது
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 58 கிலோ வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதைபதுக்கி வைத்த பெண் கைது செய்யப்பட்டார்.நெல்லிக்குப்பம் பகுதியில் ஒரு வீட்டில் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசியதகவலையடுத்து அந்த வீட்டை போலீஸார் திடீரென சோதனையிட்டனர்
அப்போது அந்த வீட்டில் 58 கிலோ வெடிபொருட்கள் சிக்கின. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த பெண்ணைபோலீஸார் கைது செய்தனர்.
அந்தப் பெண்ணுக்கும் நக்சலைட்டுகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications