For Daily Alerts
Just In
4,000 நர்சரிப் பள்ளிகளுக்கு கல்வித்துறை நோட்டீஸ்: மூடப்படும் அபாயம்
சென்னை:
தமிழக அரசு நிர்ணயித்துள்ள அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாத 4,000 நர்சரிப் பள்ளிகளுக்கு அரசின் தொடக்கக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கும்பகோணம் தீ விபத்தையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளைமூடுமாறு கடந்த ஜூன் மாதம் அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பள்ளிகளின் சார்பில் வழக்குதொடரப்பட்டது.அந்த வழக்கு விசாரணையின்போது, பள்ளிகள் அங்கீகாரம் கோரி அரசுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது.
மேலும் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க 3 மாத கால அவகாசமும் கொடுக்கப்பட்டது.
இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந் நிலையில் 1,500க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு அங்கீகாரம்வழங்கப்பட்டுள்ளதாக அரசின் தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அங்கீகாரம் பெறுவதற்காக அரசின் விதிமுறைகளை இன்னும் பூர்த்தி செய்யாமல் உள்ள 4,000 பள்ளிகளுக்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிகள் விதிமுறைகளை பூர்த்தி செய்யப்படாவிட்டால் அவற்றை மூடுவதற்கு அரசு உத்தரவிடும் என்றும் தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Thursday, September 1, 2005, 5:30 [IST]