மின் கம்பி அறுந்தது: சென்னையில் ரயில் பயணிகள் தவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரக்கோணம் அருகே மின் கம்பி அறுந்து விழுந்தததால், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் அனைத்தும்மிகவும் தாமதமாக கிளம்பியது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கள்ளாகினர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே திருவேலங்காடு என்ற இடத்தில் ரயில் பாதையில் மின் கம்பி அறுந்து விழுந்தது. இரவு8 மணியளவில் இது நடந்தது. இதையடுத்து அந்த ரயில் பாதையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, சிக்னல்கள் செயலிழந்தன.இதையடுத்து இப்பாதை வழியாக செல்லும் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்ப வேண்டிய ரயில்களும் நிறுத்தப்பட்டன. சுமார் 1 மணி நேரம் தாமதமாகஅனைத்து ரயில்களும் கிளம்பும் என அறிவிக்கப்பட்டது. இதனால் குழந்தைகள், பெண்கள் என ஆயிரக்கணக்கான பயணிகள்ரயில் நிலையத்திலேயே முடங்க வேண்டியதாயிற்று.

ரயில்கள் கிளம்புவது மிகவும் தாமதமாகியதால் பயணிகள் பலர் அதிருப்தியடைந்து ரயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டுமுறையிட்டனர். ஆனால் மின் தடை எப்போது சரியாகும் என்பது குறித்து அதிகாரிகளால் பயணிகளுக்கு உறுதி தரமுடியவில்லை. இந்த மின் தடை காரணமாக அனைத்து ரயில்களும் 1 முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக கிளம்பிச் சென்றன.

இந்த மின் தடை காரணமாக சென்னை சென்டிரல் ரயில் நிலையம் மட்டுமல்லாது, வேலூர், காட்பாடி, அரக்கோணம் ரயில்நிலையங்களிலும் அதிக அளவில் பயணிகள் அவதிப்பட்டனர். அறுந்து போன மின் கம்பி அகற்றப்பட்டு மீண்டும் மின்இணைப்பு கொடுக்கப்பட்ட பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் ரயில்கள் ஓடத் தொடங்கின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+