விஜயகாந்த் மாநாட்டில் பங்கேற்பேன்: மதுரை ஆதீனம்
மதுரை:
கருப்பு நிலா நடிகர் விஜயகாந்த் நடத்தப் போகும் மாநாட்டிற்கு என்னை அழைத்தால் நிச்சயம் கலந்து கொள்வேன் என்று மதுரை ஆதீனம்கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரையின் கருப்பு நிலா என்று எங்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர்விஜயகாந்த் நல்லவர், திறமையானவர், அப்பழுக்கற்றவர், பொறுமையானவர். அவரது அரசியல் பிரவேசம் நிச்சயம் வெற்றி பெறும்.அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆசிகள் எப்போதும் உண்டு. விஜயகாந்த் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு வந்தால்நிச்சயம் பங்கேற்பேன்.
தமிழக முதல்வர் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். அவர் அமல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்குபேருதவியாக இருக்கும். அவருக்கும் எனது ஆசிகள் உண்டு. இருப்பினும், வருகிற சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அவரது எதிர்காலத்தைநிர்ணயிக்கும் தகுதி ஆண்டவனுக்கு மட்டுமே உண்டு.
கோவில்களுக்கு வரும்போது சேலை, வேட்டியில் மட்டுமே வர வேண்டும். ஆனால் பலர் கவர்ச்சிகரமான, ஆபாசமான உடைகளைஅணிந்து வருகிறார்கள். எனவே பொறியியல் கல்லூரிகளில் ஜீன்ஸ், டீசர்ட் போன்றவற்றிற்கு தடை விதித்தது போல கோவிலுக்கும்இவற்றை அணிந்து வர தடை விதிக்க வேண்டும்.
சேலம் குட்டிச் சாமியாருக்கும், எனக்கும் இப்போது எந்தத் தொடர்பும் இல்லை. தகவல் தொடர்பு எல்லைக்கு அப்பால் அவர் சென்றுவிட்டார் என்றார் ஆதீனம்.












Click it and Unblock the Notifications