விமான நிலைய ஊழியர்களின் அலட்சியம்: மத்திய அமைச்சர் கொந்தளிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் தான் அவமரியாதையாக நடத்தப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சர் இ.அகமது, விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேலிடம் புகார் கொடுத்துள்ளார்.

மத்திய அமைச்சர் அகமது, மலேசியா செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையம்வந்துள்ளார். முக்கியப் பிரமுகர்கள் ஓய்வெடுக்கும் அறையில் தங்குவதற்காக அங்கு சென்றார். ஆனால் அறையைத் திறக்கவிமான நிலைய ஊழியர்கள் தாமதம் செய்ததாக தெரிகிறது.

அமைச்சரை அடையாளம் தெரியாத காரணத்தால் அவரை சரிவர ஊழியர்கள் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.அறைக்குள் செல்ல முடியாமல் நீண்ட நேரமாக வெளியிலேயே காத்திருந்த அகமது, கோபமாகி, மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இயக்குநருக்குப் போன் செய்தார்.

இதையடுத்து சென்னை விமான நிலைய முதுநிலை மேலாளர் ஸ்ரீவத்சவா அங்கு விரைந்து வந்துள்ளார். ஊழியர்கள் செயலுக்காகவருத்தம் தெரிவிப்பதாக கூறிய ஸ்ரீவத்சவா, முக்கியப் பிரமுகர்கள் தங்கும் அறையைத் திறந்து விட்டு அங்கு அமைச்சரைதங்கும்படி கூறியுள்ளார்.

ஆனால் கோபம் குறையாத அகமது, தான் அங்கு தங்கப் போவதில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதுதொடர்பாகவிமானப் போக்குவரத்து அமைச்சரிடம் அவர் புகார் செய்துள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+