For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

234 தொகுதியிலும் போட்டியிடுவோம்: பாஜக

By Staff
Google Oneindia Tamil News

ஊட்டி:

தமிழகத்தில் வருகிற சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஊட்டியில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நீலகிரியில் விளையும் பசும்தேயில்லைக்கு, கிலோவுக்கு ரூ. 10 விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதை வலியுறுத்தியே இந்தப் போராட்டம். இதுநடக்காவிட்டால் நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்துவோம்.

தேயிலை வாரியத்திற்கு உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும். அரசியல் காரணங்களால் இந்த நியமனம் தாமதமாகிறது.இதனால்தான் பசும் தேயிலைக்கு உரிய விலையை நிர்ணயம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபடும் ரவுடிகள், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் மீது காவல்துறை தீவிர நடவடிக்கைஎடுத்து வருவது பாராட்டுக்குரியது. சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக உள்ளது. அமைதிப் பூங்காவாக திகழ்கிறது தமிழகம்.ஆந்திராவையும், மற்ற பிற மாநிலங்களையும் உலுக்கி வரும் நக்சலைட்டுகளால் தமிழகத்தில் தலையெடுக்க முடியாமல்போனதற்குக் காரணம் காவல்துறையின் சிறப்பான கண்காணிப்பே.

முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசு விழாக்களைப் புறக்கணிப்பதாக கூற முடியாது. அவருக்கு உண்டான மரியாதையைகொடுத்தால் நிச்சயம் அவர் கலந்து கொள்வார். கட்சி விழா போல நடத்தினால் அவர் எப்படி கலந்து கொள்வார்?

சட்டசபைத் தேர்தலில் பாஜக தனித்தே 234 தொகுதிகளிலும் போட்டியிடும். யாருடைய ஆதரவையும் பாஜக கோராது. இனிமேல்தமிழகத்திலும் கூட்டணி ஆட்சியே ஏற்படும். அதைத் தவிர்க்க முடியாது என்றார் ராதாகிருஷ்ணன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X