For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடும்பத்தை கேலி செய்வது குறித்துக் கவலையில்லை: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எனது குடும்பத்தினர் அரசியலில் ஈடுபடுவதை கேலி செய்து பேசுபவர்கள் குறித்து நான் கவலைப்பட்டதே இல்லை என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

கருணாநிதியின் மைத்துனர் தட்சிணாமூர்த்தியின் பேரன் சிட்டிபாபு திருமணம் சென்னையில் கருணாநிதி தலைமையில் நடந்தது.இந்த விழாவில் கருணாநிதி பேசுகையில், தட்சிணாமூர்த்தி குடும்பத்துக்கும், எனக்கும் மிக நீண்ட கால உறவு உள்ளது. 1948ம்ஆண்டு எனக்கும், தட்சிணாமூர்த்தி குடும்பத்துக்கும் சம்பந்தம் ஏற்பட்டது.

அவர்களது குடும்பத்திலிருந்து 1938ம் ஆண்டு ஒரு மூதாட்டி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். அவர்வேறு யாருமல்ல, ஸ்டாலின், அழகிரி, தமிழரசு ஆகியோரின் கொள்ளுப்பாட்டி ராஜாமணிதான் அவர். சென்னை சிறையில் 6மாதம் அடைக்கப்பட்டிருந்தார்.

இப்படி, வழி வழியாக திராவிடக் கொள்கையில் ஊறியது எங்களது குடும்பங்கள். இன்று எங்களது குடும்பங்கள் குறித்து சிலர்கேலி பேசுகிறார்கள். பிள்ளைகள், பேரப் பிள்ளைகளை அரசியலில் ஈடுபடுத்துவதாக வசை பாடுகிறார்கள். அவர்களுக்கு ஒன்றுமட்டும் சொல்கிறேன். இவர்கள் அல்ல, இவர்களின் கொள்ளுப் பாட்டியே மொழிப் போரில் ஈடுபட்டவர்கள். அப்போதெல்லாம்நீங்கள் பிறந்தே இருந்திருக்க மாட்டீர்கள், ஏன் கருத்தரித்துக் கூட இருக்க மாட்டீர்கள்.

எனது மைத்துனர் எனது வீட்டுக்கு வருவார். வந்தால், தொண்டர்களோடு, தொண்டராக அமர்ந்திருப்பார். அவர் எனதுமைத்துனர் என்று தொண்டர்களுக்கே தெரியாது. எனது மனைவி வந்து சொன்னால்தான் எனக்கே அவர் வந்திருப்பது தெரியும்.அப்படிப்பட்டது எங்களது உறவுமுறை. ஆனால் மனதளவில் நிறைய நேசிப்பவன் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X