சங்கரராமன் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற மனைவி எதிர்ப்பு!
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கூடாது என்று கோரி அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் மனுசெய்யவுள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஜெயேந்திரர், விஜயேந்திரர்உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு தற்போது செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்திற்குமாற்றப்பட்டுள்ளது. இன்று குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 25 பேரும் கண்டிப்பாகநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.
இந்த நிலையில் சங்கரராமன் கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி ஜெயேந்திரர் உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்தச் சூழ்நிலையில் இவ்வழக்கை தமிழகத்திலேயேதான் விசாரிக்கவேண்டும். வேறு மாநிலத்திற்கு மாற்றினால் அதை ஜெயேந்திரர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார் என அவரது மனைவி பத்மாகூறியுள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பத்மா இன்று மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிகிறது.
இந்த மனுவும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.