43 அடி உயர் கார் ஷீட் பிள்ளையார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பள்ளி மாணவர்கள், கார் ஷீட்டுகளைக் கொண்டு 43 அடி உயர பிரமாண்டமான பிள்ளையார் சிலையை உருவாக்கிசாதனை படைத்துள்ளனர்.
முகப்பேர் சதர்ன்போல் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த 104 மாணவர்கள், உபயோகப்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்படாமல்வீணாக விடப்பட்ட கார் ஷீட்களைக் கொண்டு பிரமாண்டமான பிள்ளையார் சிலையை வடிக்க முடிவு செய்தனர்.இதையடுத்து 5 ஆசிரியர்களின் உதவியுடன் 43 அடி உயரம், 23 அடி அகலத்தில் பிள்ளையார் சிலையை உருவாக்கியுள்ளனர்.114 மணி நேரத்தில் இந்தப் பிள்ளையார் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 1500 கிலோ எடை கொண்ட கார் ஷீட்கள்பயன்படுத்தப்பட்டன.
ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கி திங்கள்கிழமை இப்பணி முடிவடைந்தது. பள்ளி வளாகத்தில் இந்த சாதனைப் பிள்ளையாரைமாணவர்கள் வைத்துள்ளனர். பலரும் இந்த கார் ஷீட் பிள்ளையாரை பார்த்தப் பிரமித்தவண்ணம் செல்கின்றனர்.
இந்த பிள்ளையார் சிலை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் என்று மாணவர்களும், ஆசிரியர்களும் நம்பிக்கைதெரிவித்துள்ளனர். இதற்காக கின்னஸ் நிறுவன அதிகாரிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications