திமுக மீது திண்டிவனம் ராமமூர்த்தி திடீர் பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

சேது சமுத்திரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் திமுகவின் செயல்பாடு அதிருப்தி அளிப்பதாக தமிழக முன்னால்காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பாக விழுப்புரத்தில் ஓராண்டு மத்திய அரசின் சாதனைகள் விளக்கக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய திண்டிவனம் ராமமூர்த்தியின் திமுகவையும், திமுகவைச் சேர்ந்த மத்தியஅமைச்சர்களையும் மறைமுகமாக சாடினார்.

இந்தக் கூட்டத்தில் திண்டிவனம் ராமமூர்த்தி பேசுகையில், தியாகங்கள் செய்தே தேய்ந்து போன கட்சி காங்கிரஸ். கூட்டணிதர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே பல தியாகங்களை செய்துள்ளது காங்கிரஸ்.

கடந்த 1996ம் ஆண்டு வரை தமிழகத்தின் வட மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி நல்ல பலத்துடன்தான் இருந்தது. ஆனால் அதன்பிறகு இந்த மாவட்டங்கள் காங்கிரஸ் கட்சியின் கையை விட்டுப் போய் விட்டன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வட மாவட்டங்களிலும், புதுவையிலும் காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தில் கூட போட்டியிடமுடியவில்லை. கூட்டணி தர்மம் என்ற பெயரில் இவற்றை நாம் தாரை வார்த்து விட்டோம்.

சேது சமுத்திரத் திட்டம் காங்கிரஸ் அரசின் நடவடிக்கை காரணமாக அமலுக்கு வந்துள்ளது. ஆனால் இதன் தொடக்க விழாவில்,சேது சமுத்திரத் திட்டத்திற்காக அரும்பாடு பட்ட முன்னாள் நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கோசல்ராமை யாராவது நினைவுகூர்ந்தார்களா? அவரை மறந்து விட்டனர். விழாவுக்கு ஏற்பாடு செய்த மத்திய அமைச்சர் கூட (டி.ஆர்.பாலு) கோசல்ராம் குறித்துஒரு வார்த்தை கூட கூறவில்லை. நல்லவேளை, வைகோ, கோசல்ராமை மறக்காமல் குறிப்பிட்டுப் பேசினார்.

அதேபோலத்தான், நல்ல துறைகளையும் கூட காங்கிரஸ் எம்.பிக்களால் பெற்று அமைச்சராக முடியாமல் போய் விட்டது. மத்தியதொலைத் தொடர்புத் துறையை ராஜீவ் காந்திதான் நவீனப்படுத்தினார். அதற்குப் புத்துயிர் ஊட்டினார். ஆனால் அந்தத்துறையைக் கூட காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை. கூட்டணிக் கட்சிக்கு (திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன்) அத்துறைபோய் விட்டது. இதையும் தியாகம் என்றுதான் கூற வேண்டும்.

இதை விடக் கொடுமை, போபர்ஸ் ஊழல் விவகாரம் தொடர்பாக ராஜீவ் காந்தி மீது சரமாரியாக குற்றம் சாட்டியவர்கள்தான்(திமுக) இன்று நமது கூட்டணியில் முதன்மையாக உள்ளனர். ராஜீவ் காந்தி ஊழல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியபிறகும் அதை நாம் கொண்டாடவில்லை. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலையை சந்தோஷமாக கொண்டாடியவர்கள் இன்றுநமது கூட்டணியில் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி செய்துள்ள இத்தகைய தியாகங்களை கூட்டணிக் கட்சிகள் மதிக்க வேண்டும். கூட்டணியில் காங்கிரஸின் இடம்என்ன, அதற்குரிய மரியாதை என்ன என்பதை இக்கட்சிகள் விளக்க வேண்டும் என்றார் தி ண்டிவனம் ராமமூர்த்தி.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன், விநாயகமூர்த்தி ஆகியோரைத் தொடர்ந்து திமுகவை மறைமுகமாககடுமையாக விமர்சித்துள்ளார் திண்டிவனம் ராமமூர்த்தி. இதனால் காங்கிரஸ், திமுக இடையே மீண்டும் பூசல் மூளும் என்றபரபரப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+