வரதட்சணையை மீட்டுத் தரக் கோரி பாடகர் மீது மனைவி புகார்
சென்னை:
பிரபல பின்னணிப் பாடகர் ஹாரீஸ் ராகவேந்திராவுக்கு திருமணத்தின்போது கொடுத்த வரதட்ணைப் பணத்தையும், பொருட்கள்,நகைகளையும் மீட்டுத் தருமாறு கோரி சென்னை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் கொடுத்துள்ளார்.
ஹாரீஸ் ராகவேந்திராவுக்கும், அவரது மனைவி உமாதேவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரசவத்திற்காகமலேசியாவில் உள்ள தாய் வீட்டுக்கு போன உமா தேவி திரும்பவும் சென்னைக்கு வரவிலலை.இதையடுத்த எனது மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று கோரி வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.ஆனால் ஹாரீஸ் ராகவேந்திராவின் வீட்டில் தான் கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறி உமாதேவி பதில் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உமா தேவி மீண்டும் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில்,எங்களது திருமணத்தின்போது 50 பவுன் நகை, 15 லட்சம் ரூபாய் ரொக்கம், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வீட்டுப் பொருட்களை எனதுபெற்றோர் வரதட்சணையாக தந்தனர். அவற்றை என்னிடம் திருப்பித் தர ராகவேந்திரா மறுக்கிறார். அவற்றை மீட்டுத் தரவேண்டும் என்று தனது புகாரில் கூறியுள்ளார் உமாதேவி.
இந்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications