செல்போன் எறிந்த வழக்கு: கோர்ட்டில் எஸ்.ஜே. சூர்யா ஆஜர்
சென்னை:
திரைப்படத் தணிக்கைக் குழு பெண் உறுப்பினர் வானதி சீனிவாசன் மீது செல்போனை எறிந்தது தொடர்பாக வழக்கில் இன்றுவிசாரணை தொடங்கியது. இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நேரில் ஆஜரானார்.
நியூ படத்தில் கிரண் நடித்த பாடலை சேர்க்குமாறு தணிக்கைக் குழுவை அணுகினார் சூர்யா. ஆனால் பாடல் மிகவும் ஆபாசமாகஇருப்பதாக கூறிய தணிக்கைக் குழு பெண் உறுப்பினர் வானதி சீனிவாசன் அப்பாடலை அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டார்.இதனால் கோபமடைந்த சூர்யா, கையில் இருந்த செல்போனைத் தூக்கி வானதி சீனிவாசன் மீது எறிந்தார். இதுதொடர்பாகநுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வானதி சீனிவாசன் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் சூர்யா மீதுஎழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்ததற்காக கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சூர்யா கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில்விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. அப்போது சூர்யா நீதிபதிகோவிந்தராஜுலு முன்பு ஆஜரானார். பின்னர் அரசுத் தரப்பு சாட்சிகள் நான்கு பேர் வாக்குமூலம் கொடுத்தனர்.
சாட்சிகள் வானதி சீனிவாசன், தணிக்கை வாரிய மண்டல அதிகாரி தனசேகர், அலுவலக உதவியாளர் ராஜன், திரைப்பட எடிட்டர்கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீதிபதி முன்பு வாக்குமூலம் அளித்தனர். அவர்களது வாக்குமூலங்களை நீதிபதி பதிவு செய்துகொண்டார். அதன் பின்னர் வழக்கு விசாரணை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications