வந்தே மாதரத்தின் நூற்றாண்டு விழா; நாளை கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
புதுடெல்லி:
வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு நூறு ஆண்டுகள் ஆவதையொட்டி அதை மிகப் பெரிய விழாவாக கொண்டாட மத்திய அரசுஏற்பாடு செய்துள்ளது.1907ம் ஆண்டு ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் சர்வதேச சமுதாய காங்கிரஸ் மாநாடு நடந்தது. அப்போது வந்தே மாதரம்வாசகம் இடம்பெற்ற இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. மேடம் பிகாஜி காமா என்பவர் இந்தக் கொடியை ஏற்றினார். வந்தேமாதரம் என்ற வாசகம் அப்போது முதல் பிரபலமானது.
வந்தேமாதரம் உருவானதன் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. செப்டம்பர் 7ம்தேதி வந்தே மாதரம் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.
டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் வந்தேமாதரத்தின் வரலாறு, பின்னணித் தகவல்கள், தேசியக் கொடி குறித்ததகவல்கள் விளக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.












Click it and Unblock the Notifications