குற்றலாலக் குளிருக்கு துணை நடிகை பலி
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
குற்றாலத்திற்குப் படப்பிடிப்புக்காக சென்ற துணை நடிகை அங்கு நிலவும் குளிரைத் தாங்க முடியாமல் பரிதாபமாக இறந்தார்.நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் கடும் குளிர்நிலவுகிறது. இந்த நிலையில் சென்னை வட பழனியைச் சேர்ந்த துணை நடிகை பத்மா என்பவர் அங்கு பங்காரு என்ற தெலுங்குப்படப்பிடிப்புக்காக சென்றிருந்தார்.
43 வயதாகும் பத்மா திடீரென உடல் நலம் குன்றி மரணமடைந்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், பத்மா கடும் குளிரைத்தாங்க முடியாமல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடல் படப்பிடிப்புக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications