மதானியை விடுவிக்க மார்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
மனிதாபிமான அடிப்படையில், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல்நாசர் மதானியை விடுவிக்க வேண்டும் என்று கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் கேரள மாநில செயலாளர் பினரயி விஜயன் விடுத்துள்ள அறிக்கையில், கோவை குண்டுவெடிப்புவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவரை சிறைக்குள் காவலர்கள் சிலர் தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதானி விஷயத்தில் தமிழக அரசுமனிதாபிமான முறையில் நடந்து கொண்டு அவரை விடுவிக்க ஆவண செய்ய வேண்டும். முதல்வர் ஜெயலலிதா இந்தவிஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
சிறைக்கு வெளியே மதானி உரிய சிகிச்சை பெற தமிழக அரசு தடை விதிக்கக் கூடாது. விசாரணையே இல்லாமல் அவரை நீண்டகாலமாக சிறையில் வைத்திருப்பது நியாயமற்றது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications