For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல் விலை உயர்வு: கருணாநிதி ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாத நிலையில்தான் எடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி, பாமகதலைவர் ராமதாஸ் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியே ஆக வேண்டியநிலையில்தான் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இருப்பினும் கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கேட்டுக் கொண்டதன் பேரில்காஸ் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக இந்தவிலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாதது. காஸ் விலையை உயர்த்தாதது மகிழ்ச்சி தருகிறது என்றுகூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரைபெரிதும் பாதிக்கும். எனவே இதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X