For Daily Alerts
Just In
பொடாவில் கைதான பெண் நக்சலைட் ஜாமீனில் விடுதலை
வேலூர்:
பொடாவில் கைது செய்யப்பட்ட பெண் நக்சலைட் ஆனந்தி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு தர்மபுரி அருகே காட்டுப் பகுதியில் நக்சலைட் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது ரீட்டா மேரி,ரீனா மேரி, பத்மா, உமா, விஜயா, யசோதா மற்றும் ஆனந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இவர்களை ஜாமீனில் விட சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது. இதையடுத்து ஆனந்தியைத் தவிர மற்ற அனைவரும் வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.ஆனந்தி மீது வேறு ஒரு வழக்கு இருந்ததால் அவரால் வெளியில் வர முடியவில்லை.
இந்த நிலையில் ஆனந்திக்கு மற்ற வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் செவ்வாய்க்கிழமை இருவழக்குகளிலிருந்தும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
Comments
Story first published: Wednesday, September 7, 2005, 5:30 [IST]