For Daily Alerts
Just In
சலுகை மழை பொழிந்தாலும் அதிமுக தோற்பது உறுதி: வைகோ
கோயம்பத்தூர்:
எத்தனை சலுகைகளை ஜெயலலிதா வழங்கினாலும் அதிமுக வரும் சட்டசபைத் தேர்தலில் தோற்பது உறுதி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் ஏற்கனவேவழங்கப்பட்டு பின்னர் ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்ட சலுகைகளை, புதிய சலுகைகள் போல வழங்கி வருகிறார் அவர். ஆனால் எத்தனைசலுகைகளை அவர் கொடுத்தாலும் தேர்தலில் தோற்பது நிச்சயம்.தேர்தலுக்கு மதிமுகவினர் இப்போதே தயாராகி வருகின்றனர். முதலில் ஆய்வுப் பணிகள் நடந்தன. தற்போது தேர்தல் நிதியளிப்புகூட்டங்கள் நடந்து வருகின்றன. தேர்தலுக்காக ரூ. 10 கோடி வரை நிதி வசூல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
எங்களது கூட்டணியை உடைக்க அதிமுக முயற்சிக்கிறது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. எந்தக் கட்சியும் இங்கிருந்து போகாது,புதிதாக வேண்டுமானாலும் யாராவது வந்து சேரலாம்.
மதிமுக மத்திய அமைச்சரவையில் சேராது, இது எங்களது கொள்கை முடிவு. அதில் மாற்றம் இல்லை என்றார் வைகோ.
Comments
Story first published: Saturday, September 10, 2005, 5:30 [IST]