ஜெ. சலுகைகள்: புதிய நீதிக் கட்சி வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா அறிவித்து வரும் சலுகைகள் பொதுமக்களுக்கு பலன் தருவதாக அமைந்துள்ளது என்று புதிய நீதிக் கட்சித் தலைவர்ஏ.சி. சண்முகம் கூறியுள்ளார்.

ஏ.சி.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா சமீப காலமாக பல்வேறு திட்டங்களை கொண்டுவருகிறார், பல சலுகைகளை அளித்து வருகிறார். இவை மக்களுக்குப் பலன் தருபவையாக அமைந்துள்ளன.

விரைவில் சட்டசபைத் தேர்தல் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சலுகைகள் அறிவிப்புக்கு இதுவே காரணம். இருப்பினும்இலவச சைக்கிள் போன்ற பல திட்டங்கள் கிராமப்புற மக்களுக்கு பெரும் பயன் தருபவை. இதை புதிய நீதிக் கட்சி வரவேற்கிறது.

புதிய நீதிக் கட்சியின் 6வது ஆண்டு தொடக்க விழா, அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் எனது பிறந்த நாள் ஆகியவற்றை முப்பெரும்விழாவாக தமிழகம் முழுவதும் செப்டம்பர்15ம் தேதி புதிய நீதிக் கட்சி கொண்டாடுகிறது.

விஜயகாந்த் கட்சி தொடங்குவது அவரது இஷ்டம். ஆனால் அவரை நிராகரிப்பதா, ஏற்பதா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

வருகிற சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் 3வது அணி அமையும். எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றினால், அதிமுகவுக்குபுதிய நீதிக் கட்சி ஆதரவு தரும் என்றார் ஏ.சி.சண்முகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+