அத்வானியை எதிர்க்கவில்லை: குரானா பல்டி!
புதுடெல்லி:
பாஜக தலைவர் அத்வானியை நான் எதிர்க்கவில்லை, அவருக்குக் கீழ் பணியாற்ற தயாராக இருக்கிறேன் என்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டமதன்லால் குரானா கூறியுள்ளார்.
டெல்லி முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மூத்த பாஜக தலைவர் மதன்லால் குரானா கட்சி விரோத செயல்காரணமாக, 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.இதற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அதிருப்தி தெரிவித்தார். குரானா நீக்கப்பட்டிருக்கக் கூடாது என்று அவர் தெரிவித்திருந்தார்.இதையடுத்து துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் சில தலைவர்கள் குரானாவுக்கும், அத்வானிக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தமுயற்சித்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக இந்த சமரச முயற்சி நடந்து வந்தது. இந்த நிலையில் வாஜ்பாயை அவரது வீட்டில் 2வது முறையாக சந்தித்தகுரானா, செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கும், அத்வானிக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்குக் கீழ்பணியாற்ற நான் எப்போதுமே தயாராகத்தான் இருக்கிறேன்.
நான் உள்பட கட்சியின் முத்த தலைவர்களைப் பிடிக்காத சில இளம் தலைவர்கள்தான் எனக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள்செய்த சதியால்தான் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளேன் என்றார் குரானா.












Click it and Unblock the Notifications