For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நியூ பாடல் வழக்கு: கோர்ட்டில் சரணடைகிறார் சூர்யா!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

SJ Surya with Nila

நியூ படத்தில் தணிக்கை செய்யப்பட்ட வரிகள் அடங்கிய பாடலை திரையரங்குகளில் ஒளிபரப்பியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில்இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா, திங்கள்கிழமை சென்னை நீதிமன்றத்தில் சரணடைகிறார்.

எஸ்.ஜே. சூர்யாவின்த யாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான படம் நியூ. இதில் அவரே நாயகன், சிம்ரன் நாயகி. இப்படம் ஆபாசமாகஇருப்பதாக கூறி நியூ படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் அந்தத் தடைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளதுஉச்சநீதிமன்றம்.

இந்த நிலையில் சூர்யா மீது நிலுவையில் இருந்து வந்த மேலும் இரு வழக்குகளும் தூசி தட்டி எடுக்கப்பட்டன. அதில் ஒன்று தணிக்கைக் குழுபெண் உறுப்பினர் மீது செல்போன் தூக்கி எறிந்தது. அந்த வழக்கில் சூர்யா கைதாகி விடுதலையானார்.

இன்னொரு வழக்கு, தணிக்கை செய்யப்பட்ட வரிகள் அடங்கிய பாடலை திரையரங்குகளில் ஒளிபரப்பியது, ஆபாச போஸ்கள் அடங்கியசுவரொட்டிகளை ஒட்டியதாக தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சூர்யா முன் ஜாமீன் பெற்றார். 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனைகளுக்குட்படுவதாகஉத்தரவாதப் பிரமாணம் கொடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி வருகிற திங்கள்கிழமை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சூர்யா வந்து சரணடைந்து பிரமாணப் பத்திரம் கொடுத்து முன் ஜாமீன்பெறவுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X