ஜெ.வின் சலுகை சாகசம்: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து சலுகைகளை அள்ளித் தந்து சாகசம் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா எனஅக்கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த நான்கரை ஆண்டு காலஅதிமுக ஆட்சியில்மக்களுக்காக ஒன்றும் நடக்கவில்லை. இந்த அரசின் சாதனை என்ன என்பதை முதல்வர் ஜெயலலிதா விளக்க வேண்டும்.

காவிரிப் பிரச்சினையில் தமிழக அரசு மிகவும் மெத்தனமாக உள்ளது. ஒரு முறையாவது முதல்வர் ஜெயலலிதா கர்நாடகமுதல்வரை இதுதொடர்பாக சந்தித்தாரா? காவிரி ஆணையத்தைக் கூட்ட உறுதியாக வலியுறுத்தினாரா என்றால் இல்லை.

காவல்துறையில் சில கருப்பு ஆடுகள் இருப்பதாக காவல்துறை தலைவரே கூறுகிறார். கொலை, கொள்ளைச் சம்பவங்கள் பெருத்துவிட்டன. காவலர்கள் சிலரே கொள்ளையடிக்க ஆரம்பித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கும் சலுகைகள் எல்லாமே தேர்தலை மனதில் வைத்துத்தான். இதை மக்களும் புரிந்துள்ளார்கள்.எனவே அவர்கள் ஜெயலலிதாவின் ஏமாற்று அறிவிப்புகளுக்கு மயங்கி விட மாட்டார்கள். அவரது சாகசத்திற்கு ஏமாந்து விடமாட்டார்கள்.

தமிழக ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் பிளவு ஏற்படாது. நாங்கள் கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம் என்றார்வரதராஜன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+