இலங்கை: சன் டிவி ஒளிபரப்பு நிலையம் மீது தாக்குதல்
கொழும்பு:
இலங்கையின் வவுனியா நகருக்கு அருகே உள்ள சன் டிவியின் ஒளிபரப்பு நிலையம் மீண்டும் தாக்கப்பட்டது.
வவுனியாவுக்கு அருகே ஒரு கிலோமீட்டர் தொலைவில் வைரவன்புளியங்குளம் என்ற இடத்தில் சன் டிவியின் ஒளிபரப்புநிலையம் அமைந்துள்ளது. சன் டிவி நிகழ்ச்சிகளை இந்த நிலையத்தின் மூலம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அமைப்பு மறுஒளிபரப்பு செய்து வருகிறதுஇந்த நிலையத்தின் மீது கடந்த ஜூன் மாதம் அடையாளம் தெரியாத சிலர் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த ஒளிபரப்பு நிலையம் தாக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை இரவு 9.15 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதில் யாரும் காயமடையவில்லை என்றுகூறப்பட்டுள்ளது. டால்பின் ரக வேன் ஒன்றில் தாக்குதல் நடத்தியவர்கள் வந்துள்ளனர். அவர்கள் வந்த வேனை ஒளிபரப்புநிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் பார்த்து சந்தேகமடைந்துள்ளார்.
இதுகுறித்து நிலையத்திற்கு உள்ளே இருந்த மற்ற ஊழியர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். அடுத்த சில நொடிகளில்,வேனில் இருந்தவர்கள் தங்களிடமிருந்த கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். அவர்களிடம் ஏ.கே. 47 ரகதுப்பாக்கிகளும் இருந்ததாக தெரிகிறது.
இச்சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் இலங்கை போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் அங்கு விரைந்து வந்தனர்.தாக்குதல் நடத்தியவர்கள் என்பது யார் எனத் தெரியவில்லை.அவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
கடந்த மாதம் இதே நிலையம் தாக்கப்பட்டபோது, தங்களுக்கும், இந்த நிலையத்திற்கும் சற்றும் தொடர்பில்லை என்று சன் டிவிகுழு தலைவர் கலாநிதி மாறன் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.