ஐ.டி. காரிடார் நெடுகிலும் ரயில் போக்குவரத்து: ஜெ. தகவல்
சென்னை:
தகவல் தொழில்நுட்பத் துறையின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் பல்வேறு அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள்துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னை தரமணியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச தொழில்நுட்பப் பூங்காவின் முதலாவது பகுதியை முதல்வர் ஜெயலலிதாஇன்று தொடங்கி வைத்தார். சிங்கப்பூரைச் சேர்ந்த அஸண்டாஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழக தொழில் வளர்ச்சிக் கழகம்இந்த தொழில்நுட்பப் பூங்காவை அமைத்துள்ளது.நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், எதிர்காலத் தேவைகளை மனதில் கொண்டு அடிப்படைக் கட்டமைப்புதொடர்பான திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த தொழில்நுட்பப் பூங்கா, தற்போது அமைக்கப்பட்டுவரும் அதி நவீன தகவல் தொழில்நுட்பப் பாதைக்கு (ஐ.டி. காரிடார்) வெகு அருகே அமைந்துள்ளது.
சென்னையின் பே ஏரியா என்று அழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியை, நகருடன்இணைக்க இந்த ஐ.டி. காரிடார் பாதை மிகவும் வசதியாக இருக்கும். இந்தப் பகுதியின் நீண்ட கால போக்குவரத்துத் தேவையைபூர்த்தி செய்யும் விதமாகவும் ஐ.டி. காரிடார் அமைந்துள்ளது.
இதுதவிர ஐ.டி. காரிடார் பகுதியில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக தினசரி 20 மில்லியன் லிட்டர் நீரை வழங்கும் வகையில் புதிய குடிநீர்க் குழாய்கள் பதிக்கும் பணியையும்விரைவில் தமிழக அரசு மேற்கொள்ளவுள்ளது.
ஐ.டி. காரிடார் பகுதியை மேம்படுத்தும் அதே நேரத்தில், வளர்ச்சிப் பணிகளும் ஒரு சேரவே நடந்து வருகிறது. இதுதவிரபக்கிங்காம் கால்வாய் வழியாக ரயில் போக்குவரத்தை விரிவுபடுத்தும் யோசனையும் அரசிடம் உள்ளது. தற்போது ரயில்போக்குவரத்து திருவான்மியூர் வரை மட்டுமே உள்ளது. இதை ஐ.டி. காரிடார் நெடுகிலும் விரிவுபடுத்தும் யோசனை குறித்துரயில்வே துறையுடன் பேசப்படும்.
வீட்டு வசதியைப் பொருத்தவரை, சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் 6000 வீடுகளை கட்டும் பணியைசிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கப்பூர் ரியால்டி நிறுவனம் மேற்கொண்டுள்ளது என்று கூறினார் ஜெயலலிதா.
சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு சாதகமாக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழகஅரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்தயாநிதி மாறன் கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்து மாநில அமைச்சர் ஜெயக்குமார் விரிவான பதிலை அளித்திருந்தார்.இந்த நிலையில் தயாநிதி மாறனுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஜெயலலிதா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications