பாஜக செயற்குழு கூட்டம் இன்று தொடக்கம்
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியின் 3 நாள் செயற்குழுக் கூட்டம் இன்று தொடங்குகிறது.
பாஜகவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையின் பின்னணியில் சென்னையில் அக்கட்சியின் 3 நாள் செயற்குழுக் கூட்டம் சவேராஹோட்டலில் தொடங்குகிறது. இக்கூட்டத்திற்குக் கட்சித் தலைவர் அத்வானி தலைமை தாங்குகிறார்.முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 5 மாநில பாஜக முதல்வர்கள், 230 செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்தஆண்டின் தொடக்கத்தில் டெல்லியிலும், அதற்கு முன்பாக மும்பை மற்றும் லக்னோவிலும் செயற்குழுக் கூட்டங்கள் நடந்தன. ஆண்டுக்கு 4முறை செயற்குழுக் கூட்டத்தை பாஜக நடத்தி வருகிறது.
நரேந்திர மோடிக்கு எதிரான அதிருப்தியாளர்கள் போர்க்கொடி, வாஜ்பாய்-அத்வானி இடையிலான பூசல்கள், மதன்லால்குரானாவிவகாரம் ஆகியவற்றின் பின்னணியில் பாஜக செயற்குழு சென்னையில் நடைபெறவுள்ளதால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும், பல்வேறு மாநில சட்டசபைத் தேர்தல்களை சந்திக்க வேண்டிய நிலையில் அதுதொடர்பாக பாஜக என்ன முடிவு எடுக்கப் போகிறதுஎன்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சென்னையில் இதற்கு முன்பு 1991ம் ஆண்டு செயற்குழு கூடியது. அப்போது கட்சித் தலைவராக குஷாபாவ் தாக்கரே இருந்தார். பின்னர்1999ம் ஆண்டு நடந்த கூட்டத்தின்போது பிரதமராக வாஜ்பாய் இரு"நதார். அப்போது அத்வானிதான் கட்சித் தலைவர்.
செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக முக்கியத் தலைவர்களான உமாபாரதி, ஓம் பிரகாஷ் மாத்தூர் உள்ளிட்டோர்வியாழக்கிழமை இரவே வந்து விட்டனர். நரேந்திர மோடி உள்ளிட்ட 5 மாநில முதல்வர்கள் இன்று காலை வந்தனர். பாஜக தலைவர்அத்வானி காலை 9.30 மணியளவில் வந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிற்பகலில் வருகிறார்.
செப்டம்பர் 17ம் தேதி தீவுத் திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கங்கை, காவிரி நதிகள் இணைப்பு குறித்து தலைவர்கள்பேசவுள்ளனர்.












Click it and Unblock the Notifications