For Quick Alerts
For Daily Alerts
Just In
கேப்டனின் சுற்றுப்பயணம் நாளை ஆரம்பம்!
ஈரோடு:
புதிதாகப் பிறந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் நடிகர் விஜயகாந்த், சனிக்கிழமை ஈரோடு செல்கிறார்.
மதுரையில் நடந்த மாபெரும் மாநாட்டில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ள விஜயகாந்த், முதல் முறையாக ஈரோட்டில்சனிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நடிகராக பலமுறை ஈரோடு வந்துள்ள விஜயகாந்த், அரசியல் கட்சித் தலைவராகஇங்கு வருவது இதுவே முதல் முறையாகும்.மதுரையிலிருந்து கோவை வரும் விஜயகாந்த் அங்கிருந்து கார் மூலம் ஈரோட்டுக்கு காலை 7 மணிக்கு வருகிறார். பின்னர்பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் தனது கட்சிக் கொடியையும் ஏற்றிவைக்கிறார். அதன் பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார்.
அதேபோல, மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக தலைமை அலுவலகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தன்திறந்து வைக்கிறார்.
Comments
Story first published: Friday, September 16, 2005, 5:30 [IST]