மிரட்டல் கவுன்சிலர் கட்சியை விட்டு நீக்கம்: ஜெ. அதிரடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்து பரபரப்பூட்டிய அதிமுக கவுன்சிலரை கட்சியை விட்டு நீக்கினார்முதல்வர் ஜெயலலிதா.
சென்னை மாநகராட்சியின் 39வது வார்டு கவுன்சிலர் பன்னீர்செல்வம். முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் பூங்காக்கள் திறப்புநிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் இவருக்கு வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம், வியாழக்கிழமை மாலை மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு தன் மீதுமண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்த போலீஸார் அவரைத் தடுத்து மீட்டு கைது செய்தனர்.
இந்த நிலையில் பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் ஜெயலலிதா. இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கட்சிகோட்பாடுகளுக்கும், கொள்கைகளுக்கும் முரணாக செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப் பெயரை தேடிக் கொடுத்ததாலும் பன்னீர்செல்வம்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications