மகளிர் இட ஒதுக்கீடு: ஆளுநரிடம் கருணாநிதி மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற உதவுமாறு கோரி தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடம் திமுக தலைவர் கருணாநிதிமனு கொடுத்தார்.

சென்னையில் வியாழக்கிழமை மாலை திமுக மகளிர் அணி சார்பில் பிரமாண்டமான மகளிர் பேரணி நடந்தது. பேரணியின் முடிவில்கருணாநிதி, திமுக நிர்வாகிகளுடன் ஆளுநர் மாளிகை சென்று கருணாநிதி கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தார்.

அந்த மனுவில், சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

1989ம் ஆண்டு பெண்களுக்கு சம சொத்துரிமைச் சட்டம், மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு, அரசுவேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி உள்ளிட்டபலபெண்கள் நலத் திட்டங்களை திமுக அமல்படுத்தியது.

தற்போது நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது திமுகவின் கனவை நனவாக்குவதாகஅமையும். இச்சட்டம் தடையின்றி நிறைவேற உதவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+