தமிழர்களைக் கொச்சைப்படுத்தி விட்டார் விஜயகாந்த்: கிருஷ்ணசாமி

Subscribe to Oneindia Tamil

கோவை:

திராவிடம் என்றால் தமிழ் என நமது அரசியல்வாதிகள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்று கூறி தமிழையும், தமிழர்களையும்விஜயகாந்த் கொச்சைப்படுத்தி விட்டார் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வழக்கமாக புதிய கட்சி தொடங்குபவர்கள் நன்றாக சிந்தித்து, தங்களதுகொள்கைகளை அறிவித்து விட்டு அதன் பிறகுதான் கட்சி ஆரம்பிப்பார்கள். ஆனால் பெயர் அறிவிப்பதற்கு 2 நாட்களுக்கு முன்புதான்தனது கட்சியின் பெயரையே முடிவு செய்துள்ளார் விஜயகாந்த்.

இதிலிருந்தே விஜயகாந்த்தின் லட்சியத்தின் லட்சணம் தெரிந்து விட்டது. திராவிட இயக்கம் எதற்காக வந்தது என்பதே விஜயகாந்த்துக்குத்தெரியவில்லை. இந்திய நாட்டில் ஒரு சமுதாயம், மற்றொரு சமுதாயத்தை தாழ்வாக நடத்தி விடக் கூடாத என்பதற்காகவும், ஒற்றுமையைநிலை நாட்டவும் வந்ததுதான் தென்னிந்திய நலச் சங்கம். அதிலிருந்து பிறந்ததுதான் திராவிட இயக்கம். ஆனால் இவை ஒன்றுக்கொன்றுமாறுபட்டவை.

இதில் திராவிடம் என்றா தமிழ் என்று அரசியல்வாதிகள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார் விஜயகாந்த். இது தமிழையும்,தமிழர்களையும், தமிழகத்தையும் கொச்சைப்படுத்தும் செயலாகும். இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் விஜயகாந்த்.

விஜயகாந்த் தனது கட்சியை பேசாமல் ஆந்திராவிலோ, கேரளாவிலோ, கர்நாடகத்திலோ ஆரம்பித்திருக்கலாம். ஆனால் இங்கு ஆரம்பித்துதமிழகத்தை இழிவுபடுத்தி விட்டார். இதுவரை தமிழர்களை யாருமே இப்படிக் கொச்சைப்படுத்தியதில்லை என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+