For Daily Alerts
Just In
நளினி சிதம்பரம் மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
புதுடெல்லி:
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், வருமான வரித்தறை தொடர்பான வழக்கில் ஆஜரானதை எதிர்த்துதொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சென்னை வருமான வரித்துறை தொடர்பான சில வழக்குகளில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ஆஜரானதைஅதிமுகவும், பாஜகவும் பெரும் பிரச்சினையாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எழுப்பின.
இருப்பினும், இந்தப் பிரச்சினை குறித்து தனக்குத் தெரியாது, தெரிந்திருந்தால், நிச்சயமாக நளினி சிதம்பரம் வருமான வரித்துறைவழக்குகளில் ஆஜராவதைத் தடுத்திருப்பேன் என்று சிதம்பரம் விளக்கமளித்தார்.
இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்தஉச்சநீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Story first published: Friday, September 16, 2005, 5:30 [IST]