விஜயகாந்த்துடன் கூட்டணி: சு.சுவாமி நிபந்தனை!
சென்னை:
இந்துக்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று விஜயகாந்த் கூறினால் அவரது கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்றுஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,விஜயகாந்த்தின் கட்சி இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பதாக அறிவித்தால்அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஜனதாக் கட்சி தயாராக உள்ளது.சென்னையில் திமுகவினர் நடத்திய மகளிர் பேரணியின்போது செய்தியாளர்கள் சிலர் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இதில்அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் இவ்வாறு செய்வது இது புதிதில்லையே!
பெங்களூரில் நான் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவுடன் கூட்டணி வைக்க நான் விரும்புவதாக தெரிவித்திருந்தேன்.இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி. ஆகிய அமைப்புகளுடன் நான் பேசி வருகிறேன். இருப்பினும் எனது திட்டம் குறித்து முடிவுசெய்ய வேண்டியது பாஜகவைப் பொருத்தது.
சில பாஜக தலைவர்களுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டுள்ளேன். பாஜகவுடன் சேர்ந்துசெயல்படுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை.
தமிழகத்தில் இந்து ஆதரவு கூட்டணி உருவாக வேண்டும். காஞ்சி ஜெயேந்திரர் விவகாரம் தொடர்பாக பாஜக தனது நிலையைதெளிவுபடுத்த வேண்டும். கூட்டணிக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்றார் சுவாமி.