2 வழக்குகளில் பிடிவாரண்ட்: முன் ஜாமீன் கோரும் திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசுப் பேருந்துக்குத் தீ வைத்தது தொடர்பான வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முன் ஜாமீன் கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 1999ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி கடலூர் மாவட்டம் கொக்குட்டை என்ற இடத்தில் அரசு பேருந்து மீது விடுதலைச்சிறுத்தையைச் சேர்ந்தவர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தி பேருந்துக்குத் தீ வைத்தனர்.

இதுதொடர்பாக திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் மீது பெண்ணாடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பானவழக்கு திட்டக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும் திருமாவளவன்ஆஜராகவில்லை.

இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் திருமாவளவனைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதேபோல சிதம்பரம்குற்றவியல் நீதிமன்றத்தில் இனக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறி இன்னொரு வழக்கும் நிலுவையில் உள்ளது. இதிலும்திருமாவளவன் மீது பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது.

இந்த இரு வழக்குகளிலும் தனக்கு முன் ஜாமீன் தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+